ரோந்து பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் நேரில் வழங்கினார்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.

திருச்சி விமான நிலையத்தில், ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.









