இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசின் சேவைகளை விரைவாக பெறுவதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளது.
இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இ-சேவை மையங்களை ‘டிஜிபே’ வரம்பிற்குள் கொண்டு வந்த பிறகு, ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கிக் கணக்கிலிருந்து எளிதாக பணம் எடுக்கிம் வகையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.