தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ள நிலையில் டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாகி, டிசம்பர் 5-ம் தேதி ஆந்திரத்தில் கரையைக் கடக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, அரியலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனக் கணித்துள்ளது.
படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!