நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சில பகுதிகளில் இன்னும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை உள்ளது.
இதையும் படிக்க | புயல் எதிரொலி: அரையாண்டுத் தேர்வு தேதிகள் மாற்றம்!
இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்றைய தினம் நிலைமை நன்கு சீரடைந்து விட்டது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது. எனவே, #NoPanicBuying - பொதுமக்கள் பதட்ட மனநிலையில் அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே, பால் தேவைப்படும் பிறருக்கும் பால் கிடைக்க வழிவகுக்கும்.
à®à®©à¯à®±à¯à®¯ தினம௠நிலà¯à®®à¯ நனà¯à®à¯ à®à¯à®°à®à¯à®¨à¯à®¤à¯ விà®à¯à®à®¤à¯. நாள௠மà¯à®¤à®²à¯ பால௠விநியà¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¨à¯à®¤ தà®à®à¯à®à®²à¯à®®à¯ à®à®°à¯à®à¯à®à®¾à®¤à¯. à®à®©à®µà¯, #NoPanicBuying - பà¯à®¤à¯à®®à®à¯à®à®³à¯ பதà®à¯à® மனநிலà¯à®¯à®¿à®²à¯ à®à®¤à®¿à® à®à®³à®µà®¿à®²à¯ பால௠வாà®à¯à®à®¿ à®à®°à¯à®ªà¯à®ªà¯ வà¯à®ªà¯à®ªà®¤à¯ தவிரà¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯. à®à®¤à¯à®µà¯, பால௠தà¯à®µà¯à®ªà¯à®ªà®à¯à®®à¯ பிறரà¯à®à¯à®à¯à®®à¯ பால௠à®à®¿à®à¯à®à¯à® வழிவà®à¯à®à¯à®à¯à®®à¯.â¦
â Mano Thangaraj (@Manothangaraj) December 6, 2023
ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு உள்ளது. எனவே, ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சென்னையில் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம், தனியார் நிறுவனங்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கலந்தாலோசனையில் அமைச்சர் இன்று பங்கேற்றார்.
இதையும் படிக்க | சென்னையில் நாளையும்(டிச. 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதிதிராவிடா், குலாலா் மயானத்துக்கு சாலை அமைக்கக் கோரிக்கை

அரியலூரில் 1051 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை! அமைச்சா் வழங்கினாா்!

ஹரியாணாவைவிட தில்லி யமுனை மீன்களில் நுண்நெகிழிகள் அதிகம்: ஆய்வில் தகவல்

கோவில்பட்டி அருகே பைக் விபத்தில் தலைமையாசிரியா் உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


