லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு!

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் புதன்கிழமை முதல் அதிகரித்து வெளியேற்றப்பட்டது,அதனால் லோயர்கேம்ப்பிலும் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2023, 4:10 am

DIN

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் புதன்கிழமை முதல் அதிகரித்து வெளியேற்றப்பட்டது,அதனால் லோயர்கேம்ப்பிலும் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது,புதன்கிழமை வினாடிக்கு 1,500 கன அடியாக திறந்து விடப்பட்டது, அதன்காரணமாக தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, புதன்கிழமை 135 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயிகள் கோரிக்கை
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் செவ்வாய்க்கிழமை வினாடிக்கு 1000 கன அடியாக திறந்தவிடப்பட்டது, 500 கன அடி சேர்த்து புதன்கிழமை முதல் 1,500 கன அடியாக திறந்து விடப்பட்டுள்ளது, கூடுதலாக திறந்து விடப்பட்ட தண்ணீரை பெரியாறு பாசன பகுதிகளில் தண்ணீர் செல்லாத பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும், அப்போது தான்,தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடர முடியும் என்று விவசாயிகள் சார்பில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.

அணை நிலவரம்
புதன்கிழமை நிலவரப்படி,அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 6,143.20 மில்லியன் கன அடி. நீர் வரத்து வினாடிக்கு 884.02, நீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றம் வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்தது,அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணை மற்றும் தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.