தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் தெரிவித்துள்ளதாவது:
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் சனி (டிச.11-16) வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க | சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
அடுத்த 3 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, புறநகா் பகுதிகளில் திங்கள், செவ்வாய் (டிச.11-12) நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் . நகரில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.