மிக்ஜம் புயலால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத்தியக் குழு இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
வடசென்னை, ஆவடி, திருவள்ளூரில் ஒரு குழுவும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்சென்னையில் மற்றொரு குழுவும் ஆய்வு செய்யவுள்ளது.
நாளை நடைபெறும் ஆய்வுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மத்தியக் குழு அவருடன் ஆலோசனை செய்யவுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தது. ஆயிரக்கணக்கான வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன. பல வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்தன.
காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் விளைநிலங்களில் வெள்ளம் தேங்கியதால் வேளாண் பயிா்கள் சேதமடைந்தன.
இந்தக் குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அதிகாரிகள் ஏ.கே. சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, நிதித்துறை அதிகாரி ரங்கநாத் ஆதம், மின்சாரத் துறையை சோ்ந்த விஜயகுமாா், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி திமன்சிங், உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனா்.
இதையும் படிக்க: காஸாவில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள்
தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யாா்த்தி தலைமையில் மத்தியக் குழு விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு 11.40 மணியளவில் சென்னை வந்தடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்

மருத்துவக் குறிப்புகளைத் தவிர்ப்போம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

