
தொடர் கனமழை பெய்து வருவதால் தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பேருந்துகள் இயக்க முடியாத சூழல் நிலவுவதால், சென்னையிலிருந்து 200க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் சென்ற அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால், பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு - தேவர்குளம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து சேவை அந்த மார்க்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சாலையோரம் இருந்த சிலிண்டர் கிடங்கில் வெள்ளம் புகுந்ததால், சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.
நெல்லை - மதுரை நெடுஞ்சாலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் அந்த வழித்தடத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.