தெய்வமகள் தொடருக்குப் பிறகு சீதா ராமன் தொடரில் நடிகை ரேகா கிருஷ்ணப்பா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.
தெய்வமகள் தொடரில் இரட்டை வேடத்தில் ரேகாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தற்போது அவருக்கு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சின்னத்திரை தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு சொற்பமாகவே கிடைக்கும். அப்படி கிடைத்தாலும் அது, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் நாயகிக்கு மட்டுமே இருக்கும்.
ஆனால், தெய்வமகள் தொடரிலும் சரி, தற்போது சீதா ராமன் தொடரிலும் சரி துணைப் பாத்திரத்தில் நடிக்கும் ரேகாவுக்கு இரட்டை வேடம் கிடைத்துள்ளது. இது ரேகா கிருஷ்ணப்பாவின் நடிப்பு திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
படிக்க | புற்றுநோய் மையத்தில் சீரியல் நடிகை!

தெய்வமகள் குழுவுடன் ரேகா கிருஷ்ணப்பா
இதனால், சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் குமரன் இயக்கத்தில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மிகப்பெரிய வெற்றித்தொடர். இதில் நடித்த நடிகை வாணி போஜன் தற்போது சினிமாவின் நாயகியக வலம் வருகிறார். அந்தத் தொடரில் நடிகை ரேகா கிருஷ்ணப்பா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இரட்டை வேடத்தில் ரேகா கிருஷ்ணப்பா
தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீதாராமன் தொடரில் ரேகாவுக்கு இரட்டை வேடம் கிடைத்துள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு சீதா ராமன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஸ்ரீ பிரியங்கா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். மிக மிக அவசரம், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் காவிரியாற்றங்கரை பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது வெறிச்சோடியது!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்? ஆர்பிஐ தகவல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



