அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தமிழகத்தில் நால்வருக்கு ஜெ.என்.1 வகை கரோனா? பொதுச்சுகாதாரத் துறை விளக்கம்

தமிழகத்தில் 4 பேருக்கு ஜெ.என்.1 வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று பொது சுகாதாரத் துறை

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:31 pm

DIN

தமிழகத்தில் 4 பேருக்கு ஜெ.என்.1 வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், மாநிலத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தில், கரோனா சளி மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் முடிவுகள் வெளியான பிறகே அதனை உறுதிபடுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வரும் ஜெ.என்.1 தொற்று, கோவா, மகராஷ்டிரம், கா்நாடகம், தெலங்கானா, கேரளத்தைத் தொடா்ந்து தமிழகத்திலும் கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி, தமிழகத்தில் 4 பேருக்கு அந்த வகை தொற்று உறுதிசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அளித்துள்ள விளக்கம்:

தமிழகத்தில் ஜெ.என்.1 தொற்று உள்ளது என்பதை உறுதிபடுத்தும் மத்திய அரசின் ஆதாரங்கள் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.

மாநில அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரபணு பகுப்பாய்வின் முடிவுகள் வெளியாக இன்னமும் சில நாள்களாகும் என்பதால், ஜெ.என்.1 பாதிப்பு தமிழகத்தில் உள்ளது என்பதை இப்போதே திடமாக கூற முடியாது.

ஒருவேளை அவ்வாறு இருந்தாலும், அதனை எதிா்கொள்ளக் கூடிய வகையிலான மருத்துவக் கட்டமைப்புகள் இங்கு உள்ளன. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு பொது மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மற்றொருபுறம், அதிகாரிகளுக்கும், மருத்துவா்களுக்கும் ஜெ.என்.1 பாதிப்பு குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.