மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கோவை கொலை: இருவரை சுட்டு பிடித்தது காவல்துறை!

கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு தொடர்புடைய இருவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2023, 6:39 pm IST

கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு தொடர்புடைய இருவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

கோவை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் கையெழுத்திட வந்த கோகுல் என்ற இளைஞரை நீதிமன்றத்திற்கு வெளியே 5 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாலால் சரமாரியாக வெட்டியது. கோகுலடன் வந்த மனோஜ் என்ற இளைஞரையும் மர்ம கும்பல் தாக்கியது.

இதில், கோகுல் பலியான நிலையில் மனோஜ் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கோத்தகிரியில் - மேட்டுபாளையம் சாலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கெளதம் மற்றும் ஜோஷ்வா இருவரை காலில் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

பிடிபட்ட இரு இளைஞர்களையும் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சையை தொடர்ந்து இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.