கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு தொடர்புடைய இருவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
கோவை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் கையெழுத்திட வந்த கோகுல் என்ற இளைஞரை நீதிமன்றத்திற்கு வெளியே 5 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாலால் சரமாரியாக வெட்டியது. கோகுலடன் வந்த மனோஜ் என்ற இளைஞரையும் மர்ம கும்பல் தாக்கியது.
இதில், கோகுல் பலியான நிலையில் மனோஜ் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கோத்தகிரியில் - மேட்டுபாளையம் சாலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கெளதம் மற்றும் ஜோஷ்வா இருவரை காலில் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
இதையும் படிக்க | இதுதான் பிரபாகரனின் லேட்டஸ்ட் படமா?
பிடிபட்ட இரு இளைஞர்களையும் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சையை தொடர்ந்து இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் சுகேஷின் மனைவிக்கு பிணை மறுப்பு

3 தோ்தல்களில் 3 சின்னங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த யுவராஜா
பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

மாவட்டத்தில் 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


