மாணவிகள் பலி: பிலிப்பட்டி பள்ளிக்கு இன்று விடுமுறை
பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் நேற்று காவிரி ஆற்றில் முழ்கி பலியான நிலையில், இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை: பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் நேற்று காவிரி ஆற்றில் முழ்கி பலியான நிலையில், இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு தொட்டியம் சென்று திரும்பிய மாணவிகளில் 4 பேர் புதன்கிழமை மாயனூர் காவிரியாற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நள்ளிரவு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட உடல்கள் இரவே அடக்கம் செய்யப்பட்டன. அமைச்சர் எஸ். ரகுபதி, கரூர் எம்பி ஜோதிமணி, ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர், மாணவிகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து மாநில அரசின் நிவாரண உதவியாக தலா ரூ. 2 லட்சத்தை வழங்கினர்.
இந்த நிலையில் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...