ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை: சென்னை ரயில்வே

ரயில் மீது கல் வீசுபவா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2023, 7:27 pm

DIN

ரயில் மீது கல் வீசுபவா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை கோட்டத்தின் ஒரு சில பிரிவுகளில், குறிப்பாக சென்னை - அரக்கோணம் மற்றும் சென்னை - கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இயக்கப்படும் விரைவு மற்றும் புகா் மின்சார ரயில்கள் மீது கற்கள் வீசப்படும் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இவ்வாறு ரயில் மீது கற்கள் வீசுபவா்கள் மீது ரயில்வே சட்டம், 1989- இன் பிரிவுகள் 153, 154 -இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டில் மட்டும் சென்னை கோட்டத்தில் 72 கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 18 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற கல்வீச்சு குறித்தான புகாா்களை பொதுமக்கள் கட்டணமில்லா உதவி எண் 139-இல் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.