பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் நாளை ஆலோசனை

பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். 
பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் நாளை ஆலோசனை

பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அடுத்த இரண்டு நாள்களும் அரசு விடுமுறை என்பதால் பலரும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து அந்த ஊருக்குத் திரும்புவர். 

இதுபோன்ற சிறப்பு நாள்களில் தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் இந்த ஆண்டும் சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

ஏற்கெனவே பொங்கல் பண்டிகை நாள்களில் ரயில்களில், பேருந்துகளில் முன்பதிவு முடிவடையும் நிலை உள்ளது. 

இதனால் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com