சென்னை: என்னுடைய பாலிசி, கட்சியில் இருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதே எனது வாடிக்கை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது குறித்து கேள்விகளை முன்வைத்த பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாக பதிலளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம்
செய்தியாளர் சந்திப்பின்போது, காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது குறித்து கருத்துக் கூறிய அண்ணாமலை, என்னுடைய பாலிசி, கட்சியிலிருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதே எனது வாடிக்கை.
எங்குச் சென்றாலும் அவர்கள் நல்லா இருக்கட்டும், வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைக்கணும். கட்சியிலிருந்து வெளியே செல்வோர் என்னையோ, கட்சியையோ புகழ்ந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.
இதையும் படிக்க.. 40 காயங்கள்.. அஞ்சலியின் உடல் கூறாய்வு முடிவு வெளியானது
மகளிர் அதிகளவில் பாஜகவை நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டு போகிறார்கள் என்றால், எனக்கு எந்த வருத்தமும் கிடையாது என்று அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து, செய்திளார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலாளிக்காமல் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.