மக்களுக்காக உழைப்பது குறித்து சட்டப்பேரவையில் இரு கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு பதிலுரை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசு மேற்கொண்ட பல்வேறு நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். மேலும், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
ஆட்சி பொறுப்பை வழங்கிய தமிழக மக்களுக்காக உழைப்பது தொடர்பாக பேசும்போது, பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கோள் காட்டினார்.
கடிகாரம் ஓடும் முன்பு ஓடு என்ற பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
மத்திய அரசிடமிருந்து நலத் திட்டத்துக்கான நிதிகளை கேட்டுக் கேட்டு பெற வேண்டிய சூழல் உள்ளதாக குறிப்பிட்டர் முதல்வர் மு.க. ஸ்டாலின், கவிஞர் முத்துக்கூத்தன் கவிதையை மேற்கோள்காட்டி, ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் கைகள் மறைவதில்லை என்று குறிப்பிட்டார்.
வேகமாகவும் அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்பட்டு வருவதாகவும் உரையில் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!

மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


