தூத்துக்குடி கடலில் தத்தளித்த மிளா வகை மானை திங்கள்கிழமை மீனவர்கள் மீட்டனர்.
தூத்துக்குடி கடலில் திங்கள்கிழமை காலை மிளா வகை மான் தத்தளித்தது. இதைக் கண்ட இனிகோ நகர் பகுதி மீனவர்கள் பைபர் படகுமூலம் மானை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலில் தத்தளித்த மானை மீட்டு கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட மானை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.