மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக பாசன தேவை சற்று குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று இரவு முதல் வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
நேற்று காலை வினாடிக்கு 223 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 163 கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.65 அடியிலிருந்து 86.77 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 49.03 டி.எம்.சியாக உள்ளது.