தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை: ஒரே நாளில் நீர்வரத்து 1,511 கன அடி அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை ஒரே நாளில் 1,511 கனஅடியாக  அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

News image

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றும் தலைமதகு. (கோப்பு படம்)

Updated On :5 ஜூலை 2023, 5:40 am


கம்பம்: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை ஒரே நாளில் 1,511 கனஅடியாக  அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை 400 கன அடியாக வந்து கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை 601.93 கன அடியாகவும், அன்று பெய்த பலத்த மழை காரணமாக, புதன்கிழமை அணைக்கு வினாடிக்கு 2,112.98 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 1,511 கன அடி தண்ணீர் அதிகரித்தது, நீர் மட்டம் சுமார் 1 அடி உயர்ந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

அணை நிலவரம் :
புதன்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 115.80 அடி (மொத்த உயரம் 152 அடி ), அணை நீர் இருப்பு 1,817.00 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 2,112.98 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 256.00 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 87.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடியில் 60.00 மி.மீட்டர் மழையும் பெய்தது.

தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு:
தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 400 கன அடியாக இருந்து, புதன்கிழமை அணைக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையில், தண்ணீர் திறப்பு 256 கன அடியாக இருந்தது. 

இதுகுறித்து பொறியாளர்களிடம் கேட்ட போது, அணையின் நீர்மட்டம் உயர்த்துவதற்காக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்ட நீர்வரத்து பகுதிகளில் மழை காரணமாக நீர் வரத்து ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.