ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

காமராஜர் பிறந்தநாள்: அரசுப்பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

Published On :6 பிப்ரவரி 2024, 6:33 pm IST

காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் அகராதி புத்தகங்களை வழங்கியதுடன் தனக்கு பரிசாக வந்த  7,740 புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கினார். 

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.