வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் எப்போது?

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜூலை 2023, 3:13 pm IST

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும்.

சென்னை - திருநெல்வேலி இடையே தற்போது 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் ‘வந்தே பாரத்’ ரயில் 8 மணி நேரத்தில் சென்றடையும். திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 3 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ இன் முதல் சேவை 15.02.2019 தில்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே கடந்த ஏப்.8-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.