பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சேலம் மத்திய சிறையில் காவலர்கள் திடீர் சோதனை: தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்ஜா, பீடி, சிகரெட், செல்போன் சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Published On :

சேலம் மத்திய சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்ஜா, பீடி, சிகரெட், செல்போன் சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சேலம் மத்திய சிறையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறை கைதிகள் மூன்று பேர் செல்போனை பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்த நிலையில் செல்போனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிறைத்துறை உயரதிகாரி உத்தரவின் பேரில்,  சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையில் காவலர்கள் வெள்ளிக்கிழமை காலை சேலம் மத்திய சிறைச்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கைதிகளின் அறையில்  செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் வந்தது குறித்து சிறை காவலர்களிடம் போலீசார் மற்றும் சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் பாதுகாப்பான தடை செய்யப்பட்ட பகுதியாக விளங்கும் மத்திய சிறை வளாகத்தில் வெளிமார்க்கெட்டில் அன்றாடம் கிடைக்கும் தடை செய்யப்பட்ட பொருள்கள் சிறைவளாகத்தில் சுலபமாக கிடைகப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.