மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிளஸ் 2 தேர்வு: முதல் 3 மாவட்டங்கள் எவை?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

News image
Updated On :8 மே 2023, 5:19 am

DIN

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் 97.85 சதவிகிதம் பெற்று முதலிடமும், திருப்பூர் மாவட்டம் 97.79 சதவிகிதம் பெற்று இரண்டாமிடமும், பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவிகிதம் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் 87.30 சதவிகித தேர்ச்சியுடன் கடைசி இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.