தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பாா்தி ஏா்டெல் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 5ஜி சேவையை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் 38 மாவட்டங்களுக்கும் அந்த வகைச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிறுவனத்துக்கு தற்போது 42 லட்சம் 5ஜி வாடிக்கையாளா்கள் உள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.