விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

News image
Updated On :10 அக்டோபர் 2023, 11:42 am

DIN

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

மத்திய முன்னாள் இணை அமைச்சரும் அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினரான எஸ்.ஜெகத்ரட்சகன் நடத்தும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை முதல் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், தொடா்புடைய நிறுவனங்கள், அவரது உறவினா்கள், நண்பா்களின் வீடுகள் என சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ரூ. 1,050 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனவே, இதுதொடர்பாக வருகிற அக். 14 ஆம் தேதி ஜெகத்ரட்சகன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.