கோவையில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்! 

கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்.
Published on
Updated on
1 min read

கோவை: கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், 2022 - 2023 ஆண்டுக்கான தினக்கூலியாக ரூ.721 நிர்ணயித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆயினும், புதிய ஊதியம் வழங்கப்படவில்லை. 

கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்.

இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர் துறையுடன், தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட பல தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 

இதையடுத்து, ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை (அக்.20 ) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். இதனால், கோவை மாநகர் பகுதியில் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com