தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோவையில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்! 

கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

News image

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்.

Updated On :20 அக்டோபர் 2023, 4:50 am

DIN

கோவை: கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், 2022 - 2023 ஆண்டுக்கான தினக்கூலியாக ரூ.721 நிர்ணயித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆயினும், புதிய ஊதியம் வழங்கப்படவில்லை. 

Story image

கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்.

இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர் துறையுடன், தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட பல தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 

இதையடுத்து, ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை (அக்.20 ) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். இதனால், கோவை மாநகர் பகுதியில் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.