ஆயுத பூஜையை முன்னிட்டு, திங்கள்கிழமை (அக்.23) சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
வழக்கமாக பொது விடுமுறை நாள்களில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் , திங்கள்கிழமை (செப்.23) சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்மட்டம் 47.86 அடி!
எனவே, சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.