கோவை: போக்சோ வழக்கில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ் வீட்டில் இருந்து 17 மற்றும் 19 வயதுடைய இரு பெண்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் இருவரும் மாயமானதை தொடர்ந்து, மத்திய மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இரு இளம்பெண்களையும் மகளிர் காவல் துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டதில், காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், துரைராஜை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.