
கோப்புப்படம்
சென்னையில் வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 4 (திங்கள்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இதில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல்: சிறப்புக்குழு அமைத்தது மத்திய அரசு!
முன்னதாக, மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மிக பிரம்மாண்ட அளவில் அதிமுக மாநாடு நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...