வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழகம் முழுவதும் அக்.1ல் சிறப்பு மருத்துவ முகாம்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :26 செப்டம்பர் 2023, 4:28 am

DIN

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

டெங்குவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி, 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.  பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த செல்கிறோம். இந்தப் பணி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது எனத் தெரிவித்தார். 

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின்  உடல் உறுப்பானது தானம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கானது நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.