டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தரமான குடிநீர் வழங்கக் கோரி அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 1:36 pm IST

அவிநாசியில் தரமான குடிநீர் வழங்கக் கோரி அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அவிநாசி பேரூராட்சி பகுதிக்கு விநியோகிக்கும் குடிநீர் தரமானதாக இல்லாததால், தொடர்ந்து பொதுமக்கள் காய்ச்சல், சளி, தொன்டை வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே, ஏற்கனவே பல ஆண்டுகளாக வழங்கி வந்த 2வது குடிநீர் திட்ட குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து இலச்சினை வெளியீடு, தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்ட வியூகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, அவிநாசி பேரூராட்சி 13வது வார்டுக்கு உள்பட்ட காந்திபுரம், வாணியர் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.