தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தரமான குடிநீர் வழங்கக் கோரி அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 8:06 am

DIN

அவிநாசியில் தரமான குடிநீர் வழங்கக் கோரி அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அவிநாசி பேரூராட்சி பகுதிக்கு விநியோகிக்கும் குடிநீர் தரமானதாக இல்லாததால், தொடர்ந்து பொதுமக்கள் காய்ச்சல், சளி, தொன்டை வலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே, ஏற்கனவே பல ஆண்டுகளாக வழங்கி வந்த 2வது குடிநீர் திட்ட குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து இலச்சினை வெளியீடு, தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்ட வியூகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, அவிநாசி பேரூராட்சி 13வது வார்டுக்கு உள்பட்ட காந்திபுரம், வாணியர் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.