/

உடலில் தெம்பு இருக்கும்போதே பொறுப்பைத் தாருங்கள்: சீமான்

கச்சத்தீவு என் பாட்டன் சொத்து, கச்சத்தீவை திருப்பிக் கொடுக்க வேண்டும்

News image
Updated On :3 ஏப்ரல் 2024, 4:18 pm

DIN

உடலில் தெம்பு இருக்கும்போதே ஆட்சி தாருங்கள் என்றும் சக்கர நாற்காலியில் வரும்போது பொறுப்பை தராதீர்கள் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தென்சென்னை வேட்பாளர் சு. தமிழ்ச்செல்வி ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், படிப்பகத்தை திறந்தவர் காமராசர். தெருவுக்கு இரண்டு குடிப்பகங்களை திறந்தது திமுக. தமிழ்நாட்டு மக்களை சிந்திக்கவிடாமல் செய்கிறது திமுக.

நடக்க தெம்பு இருக்கும்போதே பொறுப்பை தாருங்கள், சக்கர நாற்காலியில் வரும்போது தராதீர்கள். கச்சத்தீவை மீட்போன் என்பவர்கள் அருணாசலப் பிரதேசத்தை மீட்போம் என்று ஏன் கூறவில்லை.

கச்சத்தீவு என் பாட்டன் சொத்து, கச்சத்தீவை திருப்பிக் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கேட்பேன். அதனை செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டை பிரித்துவிடு என்று வலியுறுதுவேன் என சீமான் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.