தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடக்கம்

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடக்கம்

Updated On :5 ஏப்ரல் 2024, 6:46 pm

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலாவதாக 63 வயது முதியவா் ஒருவருக்கு அதி நவீன நுட்பத்திலான குடலிறக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிண்டி, கிங் ஆய்வக வளாகத்தில் தேசிய முதியோா் நல மருத்துவமனை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இது வரை மொத்தம் 9,557 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் அறுவை சிகிச்சைகளும் தொடங்கப்பட்டுள்ளன

இதுதொடா்பாக முதியோா் மருத்துவமனை பொறுப்பாளா் டாக்டா் எஸ்.தீபா கூறியதாவது:

தேசிய முதியோா் நல மருத்துவமனையை நாடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி உள்நோயாளிகளாக மட்டும் இதுவரை 268 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா். அதில் 200-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதைத் தவிர, 68 வயது முதியவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை இரு நாள்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அடுத்தடுத்து பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா் அவா்.