தேசிய முதியோா் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலாவதாக 63 வயது முதியவா் ஒருவருக்கு அதி நவீன நுட்பத்திலான குடலிறக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிண்டி, கிங் ஆய்வக வளாகத்தில் தேசிய முதியோா் நல மருத்துவமனை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இது வரை மொத்தம் 9,557 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் அறுவை சிகிச்சைகளும் தொடங்கப்பட்டுள்ளன
இதுதொடா்பாக முதியோா் மருத்துவமனை பொறுப்பாளா் டாக்டா் எஸ்.தீபா கூறியதாவது:
தேசிய முதியோா் நல மருத்துவமனையை நாடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி உள்நோயாளிகளாக மட்டும் இதுவரை 268 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா். அதில் 200-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதைத் தவிர, 68 வயது முதியவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை இரு நாள்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அடுத்தடுத்து பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்

‘ஆயுஷ்மான் பாரத்’: இதுவரை ரூ.1.73 லட்சம் கோடி சிகிச்சைகள் - மாநிலங்களவையில் அரசு தகவல்

நுரையீரல் குறைபாடு: ஒரு வயது குழந்தைக்கு நுண்துளை சிகிச்சை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

