தமிழகத்தில் 14 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதம் அடித்தது. அதேவேளையில், ஏப்.7 முதல் ஏப்.9 வரை மூன்று நாள்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (ஏப்.6) மற்றும் ஏப்.10,11-ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும். அதே நேரத்தில்,, ஏப்.7 முதல் ஏப்.9 வரை மூன்று நாள்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 106.7 டிகிரி (ஃபாரன்ஹீட்) வெயில் பதிவானது.
தொடா்ந்து, ஈரோடு, சேலம் - தலா 106.16 , தருமபுரி - 105.8, திருப்பத்தூா் - 104.72, திருச்சி - 104.54, மதுரை நகரம், மதுரைவிமானநிலையம், நாமக்கல், வேலூா் தலா - 104 , கோவை - 103.64, திருத்தணி - 102.74, தஞ்சாவூா் - 102.2, பாளையங்கோட்டை- 101.3 என 14 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

