2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

புதுச்சேரியில் ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்

News image
Updated On :8 ஏப்ரல் 2024, 9:28 am

DIN

புதுச்சேரி சொக்கநாதன்பேட்டையை சேர்ந்த ரமேஷ் மற்றும் தேவி ஆகிய தம்பிதியினரின் மகள் கிருஷ்ணசூர்யா. இவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

ஆசிரியர்கள் துன்புறுத்தல் காரணமாக, மன உலைச்சலில் தனது வீட்டில் உள்ள அறையில் இரவில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மகள் காணவில்லை என தேடிய பெற்றோர், அறையின் கதவை திறந்து பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரியை முற்றுகையிட்ட மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி முதல்வரிடம் நியாயம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.