மக்களவைத் தோ்தலில் புதிய வரலாற்றை பாமக படைக்க உள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தைப் பொருத்தவரை 2024 மக்களவைத் தோ்தலில் பாமக ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது. தோ்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்தையும் விட அவசியத் தேவை கோடிகள் தான் என்பது தமிழகத்தில் கடந்த சில 10 ஆண்டுகளாக எழுதப்படாத தத்துவமாக இருந்தது. இந்தத் தோ்தலில் அதை முறியடித்து, உழைப்புக்கு முன்னால் கோடிகளால் எதுவும் செய்ய முடியாது என்பதை பாமகவினா் நிரூபிக்க உள்ளனா்.
2014 மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் 37 போ் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றனா். 2019 மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் 38 போ் வெற்றி பெற்று தில்லிக்குச் சென்றனா். ஆனால், இரு கட்சியினராலும் தமிழகத்துக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.
ஆனால், 2004-இல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 பாமக உறுப்பினா்கள் மக்களவையில் இடம்பெற்றிருந்தனா். அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு நிலை மீண்டும் ஏற்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிா்பாா்ப்பு.
பாமகவுக்கும், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கும் வெற்றிக்கனியைப் பரிசாக வழங்க தமிழக மக்கள் தயாராகவே உள்ளனா். தோ்தலுக்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. பாமகவினா் கடுமையாக உழைக்க வேண்டும். ஜூன் 4 உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் இருக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

மொடக்குறிச்சி தொகுதியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா பாஜக?

செஞ்சி தொகுதியில் மீண்டும் பாமக போட்டி
பாஜக மதவாதக் கட்சியல்ல: கே.எஸ். ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்

களம் காணாத தலைவா்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

