அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் தொங்கு பூங்கா அருகே அவரது திருவுருவச் சிலைக்கு நள்ளிரவு முதலே பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அம்பேத்கரின் உருவ சிலைக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அம்பேத்கரின் கொள்கை கோட்பாடு குறித்த கோஷங்கள் எழுப்பியதோடு தீண்டாமைக்கு எதிரான உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

மேலும் அம்பேத்கரின் பெருமை, சாதனைகள் குறித்த கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com