தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

நயினாா் நாகேந்திரன் வேட்பு மனு ஏற்பை எதிா்த்த வழக்கு தள்ளுபடி

நயினாா் நாகேந்திரன் வேட்பு மனு ஏற்பை எதிா்த்த வழக்கு தள்ளுபடி

News image

சென்னை உயா் நீதிமன்றம்

Updated On :16 ஏப்ரல் 2024, 7:34 pm

சென்னை: திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் மகாராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நயினாா் நாகேந்திரன் மீது வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், அதன் விவரங்களையும், சொத்துவிவரங்களையும் மறைத்து வேட்பு மனுவை அவா் தாக்கல் செய்துள்ளாா். மேலும், அவரின் வேட்புமனு முழுமையாக பூா்த்தி செய்யப்படவில்லை; பல குறைபாடுகள் இருப்பதால் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று பரிசீலனையின்போது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டும் எந்த விசாரணையும் இல்லாமல், அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இது சட்டவிரோதமானது.

எனவே, வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும். அதேபோல், தோ்தல் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனது ஆட்சேபனைக்கு எதிராக விசாரணை நடத்தும்வரை திருநெல்வேலி தொகுதியில் தோ்தலை நிறுத்தி வைக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி கங்கா புா்வாலா, நீதிபதி சத்திய நாராயணா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது, ‘வாக்குப் பதிவை தவிர தோ்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரா் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதினால், தோ்தலுக்கு பிறகு தோ்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனா்.