சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், சேலம் அதிமுக வேட்பாளர் விக்னேஷுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “நாட்டில் பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற நிலை மாற வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், மக்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு.அம்பானி, அதானி, டாட்டா, பிர்லாவுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.
வரிமேல் வரி போடப்படுகிறது திமுக ஆட்சியில். மக்களை வஞ்சிக்கிறது மாநில அரசு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. 2 ஆண்டுகளில் ரூ. 30,000 கோடியை கொள்ளையடித்தது விடியா திமுக அரசு.
மக்கள் விரோத ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற தேர்தல் இது. அதிமுகவுக்கு வாக்களிக்கும் போது இவற்றிற்கு தீர்வு காணப்படும். கருத்துக்கணிப்புக்குப் பதிலாக கருத்துத்திணிப்பில் ஒருசில ஊடகங்கள் ஈடுபடுகிறார்கள். சேலம் அதிமுகவின் கோட்டை. தமிழகம் புதுச்சேரியில் 40 இடங்களிலும் அதிமுக வெல்லும்” என்றார்.