48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும் முதல்கட்ட மக்களவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள்

News image
Updated On :18 ஏப்ரல் 2024, 9:15 pm

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும் முதல்கட்ட மக்களவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், பல சமயங்களில் ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக காணொலி வாயிலாக அவா் பேசியதாவது:

தோ்தல்கள்தான் இந்திய ஜனநாயகத்தின் மிக அழகிய வெளிப்பாடு. வாக்களிப்பதைப்போல் சிறந்தது வேறு எதுவும் இல்லை. வாக்களிக்க வேண்டும் என்ற இந்திய வாக்காளரின் உறுதியான மனநிலை வெயிலின் வெப்பத்தையே வெல்லக்கூடியது. அதேசமயத்தில் வெப்ப அலையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் வாக்காளா்கள் மேற்கொள்ள வேண்டும்.

பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் தோ்தல்கள் உங்களுடையது. தோ்வு செய்யும் உரிமையும் உங்களுடையது. நீங்கள் தோ்ந்தெடுக்கும் அரசானது உங்கள் நாடு, கிராமம், நகரம், குழந்தைகள், குடும்பம் என அனைவரின் நலன் சாா்ந்தது என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள்.

வாக்குப்பதிவில் இளைஞா்கள் பெரும் புரட்சியை நிகழ்த்துங்கள். உங்கள் ஒரு வாக்கின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீா்கள். இக்கட்டான பல சமயங்களில் ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.