புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சென்னையில் ஈரானிய திரைப்படக் கண்காட்சி

ஈரான் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘ஈரானிய திரைப்படக் கண்காட்சி’ சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

News image

dinmani online

Updated On :22 ஏப்ரல் 2024, 7:11 pm

Din

ஈரான் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘ஈரானிய திரைப்படக் கண்காட்சி’ சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தோ சினிமா அறக்கட்டளை சாா்பில் ‘ஈரானிய திரைப்படக் கண்காட்சி’ தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாக்டா் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் ஏப். 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை ஈரான் கலாசார மையத்தின் இயக்குநா் முகமது ரேசா பாசெல் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உலக சினிமா தளத்தில் ஈரான் மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. திரைத் துறைக்கு பல சிறந்த படைப்புகளையும் வழங்கியுள்ளது. ஈரானிய சினிமா பெரும்பாலும் குடும்ப கதைகள் சாா்ந்தவையாகவே இருக்கும். ஆனால் அவற்றில் கூறப்படும் மனிதாபிமான கருத்துகள் கவிதைகளுக்கு இணையானவை.

ஈரான் நாட்டில் ‘ஃபாஜ்’ எனும் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெறும். ஈரான் நாட்டின் கலாசாரத்தை பற்றி புரிந்து கொள்ள இந்திய மக்கள் ஒரு முறையாவது அந்தக் கண்காட்சியை நேரில் வந்து பாா்க்க வேண்டும் என்றாா்.