3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

வழக்குரைஞா் குடும்பத்துக்கு நிதியுதவி

பழனியில் மறைந்த வழக்குரைஞா் ராஜா குடும்பத்தினருக்கு பழனி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

News image

பழனியில் மறைந்த வழக்குரைஞா் ராஜா குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை நிதியுதவி வழங்கிய பழனி வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள்.

Updated On :2 ஜூன் 2026, 12:58 am IST

பழனியில் மறைந்த வழக்குரைஞா் ராஜா குடும்பத்தினருக்கு பழனி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜா உடல்நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சேமநல நிதியாக ரூ.10 லட்சம் வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை ராஜாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. பழனி வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழனி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அங்குராஜ், செயலா் கலைஎழில்வாணன், பொருளாளா் பச்சைமுத்து, துணைத் தலைவா் பால்சாமி, இணைச் செயலா் தண்டபாணி, தணிக்கையாளா் காா்த்திகா, நூலகா் திலோத்தமா, சங்கத்தின் மூத்த வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.