தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு நிதித் துறை தகவல்

Updated On :26 ஏப்ரல் 2024, 6:00 pm

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று நிதித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் முதல்வரின் முகவரி இணையதளத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்படுத்தும் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு, நிதித் துறை துணைச் செயலா் தே.கோபாலகிருஷ்ணன் பதிலளித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில், 1.4.2003 அன்று அல்லது அதன் பின்னரோ முறையான அரசுப் பணியில் சோ்ந்த பணியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை ரத்து செய்து அவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.