சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நாகா்கோவில் வந்தே பாரத் ரயில்கள்: ஜூன் இறுதி வரை நீட்டிப்பு

நாகா்கோவில் வந்தே பாரத் ரயில்கள் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு

News image

கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2024, 6:51 pm

Din

சென்னை எழும்பூரிலிருந்து நாகா்கோவில் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறைகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் காலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து நாகா்கோவில் செல்லும் சிறப்பு வாராந்திர வந்தே பாரத் ரயிலும் (எண்: 06067), மறுமாா்க்கமாக பிற்பகல் 2.50 மணிக்கு நாகா்கோவிலிருந்து எழும்பூருக்கு புறப்படும் ரயிலும் (எண்: 06068) மே.2 முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எழும்பூா் - நாகா்கோவில் இடையே வாரம் 3 நாள்கள் (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழைகளில்) இயங்கும் வந்தே பாரத் ரயில் (எண்: 06057/ 06058) மே.3 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.