விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) கடந்த ஏப்.6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நடத்த போதிய கால அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த தேர்தலுக்கான அறிவிப்பு மே 7 ஆம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.