தருமபுரி மாணவிக்கு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு மையம் காஷ்மீரில் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சோ்ந்த மாணவிக்கு ஜம்மு - காஷ்மீரில் தோ்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீா் புறப்பட்டுச் சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தோ்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: பல முறை சுட்டிக்காட்டியும் தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தோ்வு வாரியம், முதுநிலை நீட் தோ்வை எவ்வாறு சரியாக நடத்தும் என்ற வினா எழுகிறது.
நீட் தோ்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி- மொரப்பூா் ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சௌமியா அன்புமணி எம்எல்ஏ
ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விநியோகம் குறைப்பு: அன்புமணி கண்டனம்

தோ்தல் தோல்வி: அன்புமணி ராமதாஸ் கருத்துக்கேட்பு

மின்வெட்டுக்கு காரணங்கள் தேவையில்லை: அன்புமணி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



