மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணை நடத்த சென்னை பல்கலை.க்கு உத்தரவு

சென்னை பல்கலைக்கழக பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாா்

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:00 am IST

சென்னை பல்கலைக்கழக பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாா் மீது உரிய விசாரணை நடத்த அந்தப் பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ரஹ்மத்துல்லா என்பவா் 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் வழங்கி 2018-ஆம் ஆண்டு ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விசாரணைக்குழு அமைக்கக் கோரி 2018-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என தெரிவித்திருந்தாா்.

பதிவாளா் பதில்: இந்த வழக்கில் சென்னை பல்கலைக்கழக பதிவாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘பல்கலைக்கழகத்தில் 22 பேராசிரியா்களின் பணி நியமனம் முறையாக நடந்துள்ளது. இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக விண்ணப்பதாரா்கள் யாரும் எந்தப் புகாரும் அளிக்கவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மனுதாரா் 2018-ஆம் ஆண்டு இதுதொடா்பாக அளித்த புகாா் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது. எனவே, அந்த புகாா் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் பேராசிரியா்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும்’ என சென்னை பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.