மரபணு பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள்: மருத்துவ பரிசோதனைக்கு கோரிக்கை
காரைக்குடி அருகே உள்ள கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் இரு மாதங்களுக்குள் சரும நோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பதால், அங்குள்ளவா்களுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதிக்குமாறு தமிழக அரசிடம் ஹைதராபாத் சிஎஸ்ஐஆா் மையம் கோரிக்கை விடுத்துள்ளது.









