‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சென்னையில் பருவ மழை: அமைச்சர்கள் ஆலோசனை!

சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

News image

சென்னை தியாகராயநகர் பேருந்து நிலையம். (கோப்புப்படம்)

DIN

Updated On :16 ஆகஸ்ட் 2024, 11:59 am

DIN

சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையடுத்து மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ.வேலு. தா.மோ.அன்பரசன், உதயநிதி, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு என 7 துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சென்னை எம்.பி.க்கள், கவுன்சிலர்கள், மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம், நகராட்சி நிருவாகம் என மழைக்கால மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் துறை அதிகாரிகளும் உள்ளனர்.

மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், ஆகாயத் தாமரையை அகற்றுவது உள்ளிட்டவை குறித்தும் கடந்த ஆண்டைவிட கூடுதலாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.