சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

நாகை மக்களவை உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் ஆகியோர் கொடியசைத்து, தொடங்கி வைத்தனர்

News image
பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தபோது
Updated On :16 ஆகஸ்ட் 2024, 7:43 am

DIN

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இன்று தொடங்கிய பயணிகள் கப்பல் போக்குவரத்தை, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகை மக்களவை உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் ஆகியோர் கொடியசைத்து, தொடங்கி வைத்தனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023 அக்டோபர் 14- ஆம் தேதியில் தொடங்கி வைத்தார்.

செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இது, இருநாட்டு பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் அடுத்த ஒரு சில நாள்களில் வடகிழக்கு பருவ மழையையும், பயணிகளின் பாதுகாப்பையும் காரணம் காட்டி, 2023 அக்டோபர் 23 ஆம் தேதியில், கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

சிவகங்கை கப்பல்

சிவகங்கை கப்பல்

இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை என்ற பெயரில் மீண்டும் கப்பல் சேவை இன்று (ஆக. 16) தொடங்கப்பட்டது.

இந்த சேவையை நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், மக்களவை உறுப்பினர் வை. செல்வராஜ், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்த இலங்கை தமிழர்கள் 5 நபர்கள் உள்பட, 44 பயணிகள் முதல் பயணமாக கப்பலில் சென்றனர்.

சிவகங்கை கப்பலானது, இன்று காலை 10 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. சிறிது காலதாமதம் ஏற்பட்டதால், பிற்பகல் 12.15 மணிக்கு பிறகு புறப்பட்டது.

காங்கேசன்துறைக்கு மாலையில் சென்றடையும் கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு, சனிக்கிழமை (ஆக. 17) இலங்கையில் இருந்து புறப்பட்டு நாகையை வந்தடைகிறது.

பயணிகள் கப்பல், ஆகஸ்ட் 18 முதல் நாள்தோறும் இரு வழித்தடங்களிலும் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் இயக்கப்படும்.

கப்பலில் 123 சாதாரணப் பிரிவு இருக்கைகளும், 27 பிரீமியம் பிரிவு இருக்கைகளும் உள்ளன..

பயணச் சீட்டு ஜிஎஸ்டி வரியுடன் சாதாரண இருக்கைக்கு ரூ.5000, பிரீமியம் இருக்கைக்கு ரூ.7500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

25 கிலோ எடை கொண்ட உடமைகள் மட்டுமே எடுத்து செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.